பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

265 0

15665381_701247096708205_6399728591097103059_nஇலங்கை அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள பொதுத்து வீடுகள் தமக்கு வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை பொது மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
காலநிலைக்கு ஒவ்வாத பொருத்து வீடுகளுக்குப் பதிலாக நிரந்தமான கல் வீடுகளை அமைத்துத் தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு 65,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால் அந்த வீடுகள் வடக்கு- கிழக்கின் காலநிலை மற்றும் சூழலுக்கு பொருத்தமற்றவை என்று தெரிவித்துள்ள மக்கள், நிரந்தரமான கல் வீடுகளைக் கோரி வருகின்றனர்.
இதனொரு கட்டமாகவே, கிளிநொச்சியின் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

15589684_701247090041539_9105657653977263288_n 15589693_701247030041545_1185237851876533631_n 15622021_701247053374876_8804649974209170766_n 15622140_701247093374872_5689706091403641224_n