தேசிய உற்பத்தித்திறன் விழாவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விருது

490 0

image-0-02-06-a15feb69098e4c3bd686a504627a04cc95dc573a5cc2934bec98266b9e3f6818-vதேசியஉற்பத்தித்திறன் செயலகத்தால் தேசியரீதியில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் யாழ் மாவட்டச் செயலகம் முதன் முறையாக 2015 ஆம் ஆண்டுக்கான போட்டித் தொடரில் பங்குபற்றி அரசதுறை திணைக்களங்களுக்கான பிரிவில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
இதனை சிறப்பிக்கும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரூபவ்ரஞ்சித் மத்துமபண்டார் பங்களிப்போடு 14.12.2016 அன்று ஸ்டெய்ன் ஸ்டூடியோஸ் ரத்மலானையில் நடைபெற்ற தேசியஉற்பத்தித்திறன் விருதுவழங்கும் விழாவில் யாழ் மாவட்டச் செயலகம் விருதினைப் பெற்றுக் கொண்டது.