ரத்துபஸ்வெல சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்பு

542 0

mahinthaரத்துபஸ்வெல சம்பவத்திற்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.கரன்தெனிய – கொஸ்வத்துமானானா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டுஉரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,’ஊடகவியலாளர்கள் தொடர்பில் நான் கதைக்க மாட்டேன். அவர்களுக்கு நேர்ந்துள்ள நிலைமைகுறித்து அனைவரும் அறிவார்கள். தற்போது மிகவும் நன்றாக கவனிக்கின்றார்கள். ரத்துபஸ்வெலகுறித்து தற்போது காண்பிக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி சேவையை நான் அவதானித்தேன். அந்ததொலைக்காட்சி சேவை இன்றும் என்மீது தாக்குதல் நடாத்துகின்றது. ஹம்பாந்தோட்டை தாக்குதல்சம்பவத்தை காண்பிக்கவில்லை. ரத்துபஸ்வெல பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தற்போதுகாண்பிக்கின்றனர். யார் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நான்பொறுப்பு கூற வேண்டியமையினாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்.என்று மேலும் தெரிவித்தார்.