இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என்று இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய ஹிரிணிரத்ன மங்கலிகா என்பவரை, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பெண் கடைசியாக இரத்தினபுரி பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றுகொண்டிருந்ததாக, பஸ்தரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீவி கமராவின்மூலம் கண்டறியப்பட்டது.
அதன் பின்னரே இவர் காணாமல் போயுள்ளார்.
இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 071-9186357, 0724904379 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோட்டுக்கொண்டுள்ளனர்.

