இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

354 0

malesiya-agrement-16-2016இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அந்த நாட்டு பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் இந்த இரு தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மலேசிய பிரதமர் அலுவலகத்தில் இந்த இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றமை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மலேசிய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு மலேசியாவின் ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,