யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை- ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

327 0

760591865courtயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி .சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி இ. கணாதீபன் ஆஜராகியிருந்தார்.

சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையினை இன்று நீதிமன்றில் தாக்கல் செய்திதிருந்தனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களில் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடே விபத்துக்கு காரணம் என்றும், ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினாலேயே உயிரிழந்ததாகவும் வைத்திய பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது.