எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீடு

232 0

imagesஎல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியினால் எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணைக்குழுவுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாளாக  கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.