கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நொவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட நொவம்பவர் மாதத்தில் வீடுடைப்பு கொள்ளையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நுகேகொடை, கம்பஹா, தங்காலை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.