துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தவர் பலி

260 0

akkarapatu_acci_001ஹப்புத்தளை இதல்கஸ்ஸின்ன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த குறித்த இளைஞர் தவறி வீழ்ந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளைஞர் தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இதல்கஸ்ஸின்ன தோட்டத்தில் சேவையாற்றும் 18 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.