கட்டைப்பிராய் பகுதியில் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது

281 0

download-1யாழ்ப்பாணம் கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய கோப்பாய் மத்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் விநோஜன் என்று அறியமுடிகிறது.

கைது செய்யப்பட்ட வினோஜன் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கல்வியங்காடு கட்டைப்பிராய் விளையாட்டரங்கு வீதியில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இரச்சலுடன் உலாவியுள்ளனர்.

இதனையடுத்து அவ்வூர் இளைஞர்கள் விழிப்படைந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களைப் பின் தொடர்ந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து அம்மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு அக்குழுவினர் ஓடியுள்ளனர்.

விபத்துக்குள்ளாகி கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளானது தென்பகுதியில் பகுதிசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் தற்போது கோப்பாய் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.