அதிகாரம் தொடர்பில் அரசியல் வாதிகளின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் – ஜனாதிபதி

284 0

maithiripala-55445d1அதிகாரம் தொடர்பாக அரசியல் வாதிகளின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின், உருவச் சிலையை கொழும்பில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பணம் மற்றும் அதிகார விடயங்களில்அரசியல்வாதிகளிடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அரசியல்வாதிகள் பணத்தையும், அதிகாரத்தையும் இலக்காக கொண்டு செயற்படுகின்றனர்.

இந்த நிலை இலங்கையில்மாத்திரமின்றி சர்வதேச நாடுகளிலும் உள்ளது.

30 வருடங்களுக்கு முற்பட்ட தலைவர்கள் மக்களின் நலத்தைக் கருத்திற்கொண்டு செயற்பட்டனர்.
அத்தகைய தலைவர்களில் ஒருவரே டட்லி சேனாநாயக்க.

இலங்கையின் தலைவர்கள், இவ்வாறான தலைவர்களை தமக்கு முன்னோடியாக கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.