இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

258 0

fishermanஇலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்கள இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.