சிறுநீரக விற்பனை – இந்தியர்களின் விளக்கமறியல் நீடிப்பு

316 0

court-hammer-720x480சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இந்தியர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முதன்மை நீதவான் கிஹான் பிலபிட்டிய, சந்தேகத்துக்குரியவர்களின் விளக்மறியல் காலத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடித்தார்.

சிறுநீரக வியாபாரம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றிருந்தனர்.

இதனை அடுத்து, தப்பிச் சென்றிருந்த எட்டுப் பேரில் ஐந்து பேர் மீண்டும் மன்னாரி வைத்து கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.