கொக்கேயினுடன் இருவர் கைது

280 0

kkkkkkkkkkkkஇரண்டு கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை – தல்துவ பகுதியில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைதானதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் ஹட்டன் – டிக்ஓயா பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 25 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவர்களை, போலி கொக்கேய்ன் விற்பனை நாடகம் ஒன்றை அரங்கேற்றி கைது செய்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 1 கிலோ 10 கிராம் கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.