குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பூட்டு

238 0

குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடி வைக்க தூதரகம் தீர்மானித்துள்ளது.

குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால், தூதரகத்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடி வைக்க தீர்மானித்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த மாதம் 18ஆம் திகதி வரை குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்  குறித்த காலப்பகுதிக்குள்   குவைட்டிலுள்ள இலங்கையர்களின் அவசர சேவைக்காக, Slemb.kuwait@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுமாறும் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.