திறமையாக கடமையாற்றிய பொலிஸாரை கௌரவிப்பு(காணொளி)

290 0

polயாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற பொலிஸாரில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றியவர்கள், களவுகளில் ஈடுபட்;டவர்களை கண்டுபிடித்தவர்கள், குழுக்களாக செயற்பட்டு அடாவடித்தனங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தவர்கள் ஆகியோர்களுக்கான பாராட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சங்கீத தர்மரட்ண மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லொஸ் ஆகியோர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.