மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளராக மஸ்தான் தெரிவு!

227 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விஜேராமவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற வேட்பாளர்கள் தெரிவின்போது இத்தெரிவு இடம்பெற்றுள்ளதாக மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளாகள் தெரிவு இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளாகள் போட்டியிடவுள்ளனர்” என கூறினார்.

கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்தான் இம்முறை பொதுஜன பெரமுனவின் மூலமாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.