திருமலையில் போதைப் பொருளுடன் நால்வர் கைது

279 0

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பின் போது நால்வர் வெவ்வேறாக நேற்று (04) மாலை  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மூதூர் கைரியா நகரை சேர்ந்த வயது (38) குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலை லவ்லேன் வீதியில் வைத்து 40 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து வழங்கப்பட்ட தகவலையடுத்து மகமாயபுரம் மட்கோ திருகோணமலை பகுதியில் வைத்து 1210 மில்லி கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் வயது (18) கைது செய்துள்ளதனை தொடர்ந்து குறித்த இளைஞனிடம் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஜூட் வீதி பாலையூற்று பகுதியில் வைத்து வயது (26) உடைய குடும்பஸ்தர் ஒருவருர் 1150 மில்லி கிராம் ஹெரோயினுடனும்  தொடர்ச்சியாக  இவரின் தகவலையடுத்து மற்றுமொருவரான ஜமாலியா பகுதியில் வைத்து வயது (21) உடைய இளைஞனும் 1020 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை உரிய போதைப் பொருட்களுடன் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதஙவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.