சர்­வ­தேச நெருக்­கடி குழு இலங்கை பற்றி  எச்சரித்துள்ள கணிப்பீடு

347 0

 

தேசிய சுதந்­திர தினம் தலை­நகரில் வெகு கோலா­க­ல­மாகக் கொண்­டா­டப்­பட்­டுள்­ளது. ஆனால், சுதந்­திர நாடாக 72 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்­துள்ள இலங்கை, மோதல் நெருக்­க­டி­யுள்ள நாடாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த 2020ஆம் ஆண்டில் வன்­மு­றைகள் அதி­க­ரிக்­கின்ற நாடாக இது திகழும் என்று அனு­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உலக நாடு­களின் நிலை­மை­க சர்­வ­தேச நெருக்­கடி குழுவே, இவ்­வாறு அடை­யாளம் கண்டு ளை வரு­டாந்தம் கணித்து எதிர்வு கூறு­கின்ற ஐசிஜி என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்றதனது அனு­மா­னத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

மேலும் எதிர்­கா­லத்தில் நாட்டில் சமா­தா­னமும், ஐக்­கி­யமும் நிலை­கு­லையக் கூடிய ஆபத்­தான நிலை­மைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­யையும் அது தொனி செய்­தி­ருக்­கின்­றது. ஆசிய பிராந்­தி­யத்­தி­லேயே இலங்கை மட்­டுமே இத்­த­கைய நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது என்­பது அந்தக் குழுவின் வரு­டாந்த பார்வைக் கணிப்­பாகும்.

பெல்­ஜியம் நாட்டின் தலை­ந­க­ரா­கிய பிர­ஸல்ஸில் தனது தலை­மை­ய­கத்தைக் கொண்­டுள்ள சர்­வ­தேச நெருக்­கடி குழு­வா­னது. சுயா­தீன இலாப நோக்­கற்ற ஒரு அரச சார்­பற்ற சர்­வ­தேச நிறு­வ­ன­மாகும். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தலைமைச் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்ற பிர­ஸல்ஸில் 1995ஆம் ஆண்டு பல்­வேறு துறை­களைச் சார்ந்த அறி­ஞர்கள், ஆய்­வா­ளர்­களை உள்­ள­டக்கி உரு­வாக்­கப்­பட்ட இந்தக் குழுவின் சர்­வ­தேச மட்ட நெருக்­கடி மிக்க விவ­கா­ரங்கள், பிரச்­சி­னைகள் தொடர்­பி­லான ஆய்­வுகள், ஆய்­வ­றிக்­கைகள் சர்­வ­தேச கொள்கை வகுப்­பா­ளர்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள் மற்றும் சர்­வ­தேச ஆய்­வா­ளர்­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

முரண்­பா­டு­க­ளையும் மோதல்­க­ளையும் தடுத்து, சமா­தானம் மிகுந்த ஓர் உல­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான கொள்­கை­களை வகுப்­ப­தற்­காகச் செயற்­பட்டு வரு­கின்ற இந்தக் குழு சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­தாகப் பணி­யாற்றி வரு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தக் குழு­வி­னு­டைய வரு­டாந்த ஆய்­வ­றிக்­கையின் மூலம் இலங்­கையின் அர­சியல் நிலைமை எந்த அள­வுக்கு மோச­மா­கி­யுள்­ளது என்­பது வெளிச்­சத்துக்கு வந்­துள்­ளது.

புதிய ஆண்­டிற்கே உரிய பற்­பல கன­வு­களை மக்கள் கொண்­டி­ருந்த நிலையில் புதிய அர­சாங்­கத்தின் தலை­மையில் நாடு 2020க்குள் பிர­வே­சித்­தது. அதுவும் முப்­பது வரு­டங்­க­ளாக ஆயுத முரண்­பாட்­டிற்குள் சிக்கி அதி­லி­ருந்து மீள்­வ­தற்கு வழி­ய­றி­யா­தி­ருந்த நிலையில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­வர்­களின் பிடியில் இருந்து நழுவிச் சென்று மீண்டும் அவர்­க­ளு­டைய பொறுப்பில் ஆட்சி அதி­காரம் மீண்­டுள்­ள­தை­ய­டுத்து, இந்த நிலைமை உரு­வாகி இருக்­கின்­றது.

இன உற­வுகள், யுத்­தத்தின் பின்­ன­ரான நிலை­மை­களில் மரபு ரீதி­யாக ஏற்­பட வேண்­டிய நிலை­மைகள், சட்­ட­வாட்சி என்­ப­வற்றின் அடிப்­படைக் கொள்­கை­களைப் புரட்டிப் போட்­டுள்ள இந்த ஆட்சி மாற்­றத்தை சர்­வ­தேச நெருக்­கடி குழு ‘இலங்­கையின் அபா­ய­க­ர­மான பேரலை மாற்றம்’ என பெயர் சூட்டி குறிப்­பிட்­டுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றியக் கொள்­கை­க­ளுக்கு உரு­வா­கி­யுள்ள சவால்கள்

புதிய ஆட்­சியில் ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பதவி ஏற்­றுள்ள கோத்­த­பாய மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ சகோ­த­ரர்கள், இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கவும், ஜனா­தி­ப­தி­யா­கவும் செயற்­பட்­டி­ருந்த ஒரு தசாப்­தத்­துக்கும் முந்­திய காலத்தில் யுத்த நியதிச் சட்­டங்­களை அப்­பட்­ட­மாக மீறி­யி­ருந்­தனர் என்று ஆதா­ர­பூர்­வ­மாகக் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை சர்­வ­தேச நெருக்­கடிக் குழு தனது அறிக்­கையில் நினைவு கூர்ந்­துள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் எட்­டி­யி­ருந்த சட்­ட­பூர்­வ­மான அடை­வுகள், கொண்­டி­ருந்த கொள்கை ரீதி­யி­லான கடப்­பா­டுகள் என்­ப­வற்றில் ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ தலை­­மை­யி­லான புதிய அர­சாங்கம் தலை­கீ­ழான மாற்­றங்­களைச் செய்­துள்­ளது. அத்­துடன், யுத்­தத்­துக்குப் பின்னர் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம், பொறுப்புக் கூறு­கின்ற கடப்­பாடு, (சிறு­பான்­மை­யி­ன­ரையும்) உள்­வாங்­கிய அரச நிர்­வாகம் என்­ப­வற்றில் ஐரோப்­பிய ஒற்­றி­யத்­துக்கும், ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கும் இலங்கை ஏற்­க­னவே வழங்­கி­யி­ருந்த உறு­தி­மொ­ழி­க­ளையும் புதிய அரசு மீறி­யுள்­ள­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

பெரும்­பான்­மை­யான சிங்­கள பௌத்­தர்­களின் மத்­தியில் வேரூன்­றி­யுள்ள இன ரீதி­யி­லான தேசிய உணர்வு பரி­மா­ணத்தின் அடிப்­ப­டை­யி­லான இந்த அர­சியல் கொள்கை மாற்றம் இன, மத ரீதி­யான பதற்ற நிலை­மை­களை அதி­க­ரிக்­கின்ற அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மேலும், இவற்றைக் கட்­டுப்­ப­டுத்த வல்ல நிறை­வேற்று அதி­கா­ரத்­தி­னதும், அர­சி­னதும் சக்­தி­யையும் அது பல­வீ­னப்­ப­டுத்தி உள்­ளது.

சக­ல­ரையும் உள்­ள­டக்­கிய ஆட்சி நிர்­வாக முறை­மையில் நிலை­கொண்­டுள்ள உறு­தி­யான அர­சியல் நிலைப்­பாடு, மேம்­பா­டு­டைய மனித உரி­மைகள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு என்­ப­வற்­றிற்கு ஆத­ர­வ­ளிக்­கின்ற ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிலைப்­பாட்­டிற்கு இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள இந்த ஆட்சி மாற்­றமும், அர­சியல் கொள்­கை­க­ளி­லான மாற்­றமும் ஆழ­மான சவால்­களை விடுத்­துள்­ளன.

இத்­த­கைய பின்­பு­லத்தில், சட்­ட­வாட்சி, மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கின்ற அர­சாட்சி என்­ப­வற்­றுக்கு முன்­னைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் அளித்­தி­ருந்த உறு­தி­மொ­ழி­யையும் கடப்­பாட்­டையும் நிறை­வேற்­று­மாறு கொழும்பு அர­சுக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யமும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடு­களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்­வ­தேச நெருக்­கடி குழு தனது அறிக்­கையில் வலி­யு­றுத்தி உள்­ளது.

நாட்டின் சனத்­தொ­கையில் முக்­கால்­வா­சி­யி­னரைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டுள்ள சிங்­கள பௌத்த மக்­களின் அதி­கப்­ப­டி­யான எண்­ணிக்­கை­யா­ன­வர்­களின் ஆத­ரவை இன, மதத் துவேச அர­சியல் பிர­சா­ரங்­களின் மூலம் ஒன்­று­தி­ரட்டி தேர்­தலில் வெற்றி பெற்ற கோத்­த­பாய ராஜ­பக் ஷ

ஜனா­தி­பதி பத­வியைக் கைப்­பற்றிக் கொண்டார். தேர்தல் வெற்றிச் சூட்­டோடு சூடாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் தனது சகோ­த­ர­ரு­மா­கிய மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிர­த­ம­ராகப் பதவிப் பிர­மா­ணமும் செய்து வைத்தார்.

அதி­ரடி நட­வ­டிக்­கைகள்

இறுதி யுத்­தத்­தின்­போது விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராகக் கடும் போக்­கி­லான இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அர­சியல் பாது­காப்புத் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு அதீத அதி­கார பலத்­துடன் செயற்­பட்­டி­ருந்த சகோ­த­ரர்கள் இரு­வரும் அதி­கார பலத்தை சுமார் நான்கு வருட காலம் இழந்­தி­ருந்­தனர். ஆனால் 2019 செப்­டம்பர் தேர்­தலின் மூலம் பொது­ஜன பெர­முன என்ற புதிய அர­சியல் கட்­சியின் ஊடாக அமோக வெற்­றி­யீட்டி மீண்டும் அதி­கா­ரத்தைக் கையில் எடுத்­துள்­ளார்கள்.

ஆட்சி அதி­கா­ரங்­களைக் கைப்­பற்­றிய வேகத்தில் அரச நிர்­வாக நடை­மு­றை­க­ளிலும், ஆட்சி நிர்­வா­கத்­தி­லான கொள்கை நிலைப்­பாட்­டிலும் அதி­ர­டி­யாகப் பல மாற்­றங்கள் நிகழ்ந்­தன. புதிய அர­சாங்­கத்­திற்­கான அமைச்­ச­ர­வையில் எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­ருக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. இரண்டே இரண்டு தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்கே அமைச்சுப் பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டன.

சிறு­பான்மை இன மக்­களை அர­சியல் அதி­கார அந்­தஸ்தில் இருந்தும், அர­சி­யலில் இருந்தும் ஓரங்­கட்­டு­வ­தற்­கான முதற்­ப­டி­யாக இந்த அமைச்­ச­ரவை நட­வ­டிக்­கைகள் அமைந்­தன. தொடர்ந்து முன்­னைய அர­சாங்­கத்­தினால், 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் உரித்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­தி­ப­திக்­கான நிறை­வேற்று அதி­கார பலத்தை மீண்டும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பில் புதிய மாற்­றங்­களைச் செய்­யவும், தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற அர­சியல் கட்­சி­களின் தொகு­தி­வா­ரி­யான வாக்குப் பலத்­துக்­கான வெட்டுப் புள்­ளியை 5 இலி­ருந்து 15 வீத­மாக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால், ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த ஒருவர் எத்­தனை தட­வைகள் வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­ப­தி­யா­கு­வ­தற்குத் தேர்­தலில் பங்­கேற்க வழி பிறக்கும்.

பத்­தொன்­ப­தா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தில் ஜனா­தி­பதி எந்­தவோர் அமைச்சுப் பொறுப்­புக்­க­ளையும் கொண்­டிருக்க முடி­யாது என்ற வரை­ய­றையில் புதிய அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் மூலம் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்டால், எத்­தனை அமைச்­சுக்­க­ளையும் ஜனா­தி­பதி பொறுப்­பேற்று தனது கைக்­குள்­ளேயே வைத்­துக்­கொள்ள முடியும்.

அது மட்­டு­மல்­லாமல் நீதி­ப­திகள், சட்­டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், தேர்தல் ஆணை­யா­ளர்கள் உள்­ளிட்ட முக்­கிய பத­வி­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்புச் சபையின் பங்­க­ளிப்­பின்றி தன்­னிச்­சை­யாக தனக்கு விருப்­ப­மா­ன­வர்­களை ஜனா­தி­பதி நிய­மிப்­ப­தற்கு உரிய அதி­கார வல்­ல­மை­யையும் இந்த உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் வழங்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

சிக்­க­லான நிலைமை

பெரும்­பான்­மை­யி­ன­ரா­கிய சிங்­கள மக்கள் எதிர்க்­கின்­றார்கள் எனச் சுட்­டிக்­காட்டி, மாகா­ணங்­க­ளுக்­கான ஆட்சி உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள அதி­காரப் பர­வ­லாக்­கலை ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள ராஜ­பக் ஷக்கள் தொடர்ச்­சி­யாக மறுத்து வரு­கின்­றார்கள்.

இதனால் நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் சுய ஆட்சி உரி­மை­களை நோக்­கிய பொறி­முறை மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று சர்­வ­தேச நெருக்­கடிக் குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

புதிய அர­சாங்­கத்தின் கடும் போக்­கான செயற்­பா­டு­க­ளினால் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டிய சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வ­துடன், ஏற்­க­னவே நடை­மு­றையில் இருந்து வரு­கின்ற உரி­மை­களும் இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­வற்­கான சூழல் உரு­வாகி வரு­கின்­றது.

தேசிய சுதந்­திர தின வைப­வத்தில்

தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற – சிறு­பான்மை இன மக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்தும் வகை­யி­லான கடும் போக்­கி­லான அர­சாங்­கத்தின் நிலைப்­பாடும் இத்­த­கைய உரிமை மறுப்பின் அடை­யா­ள­மா­கவே வெளிப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் சர்­வ­தேச நெருக்­கடி குழு சுட்­டிக்­காட்­டி­யுள்ள சிறு­பான்மை இன மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­கின்ற ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை­களை எதிர்­கொள்­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யமும், சர்­வ­தேச நாடு­களும் இலங்­கையின் வெளி­வி­வ­கார நிலை­மை­களில் முன்­னெ­டுக்­கின்ற நட­வ­டிக்­கைகள் உள்­நாட்டில் பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் பதற்ற நிலை­மையை உரு­வாக்க வழி­கோலக் கூடும்.

பெப்­ர­வரி மாதத்தின் இறு­திப்­ப­கு­தியில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் மற்றும் பொறுப்புக் கூறு­கின்ற அதன் கடப்­பாட்டுச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லான நிலை­மைகள் குறித்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்கை வெளி­யாக உள்­ளது.

அந்த அறிக்கை தொடர்­பிலும், மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர்பில் புதிய அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை எடுத்­து­ரைக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளது. உண்­மையில் இது ஒரு சிக்­க­லான நிலை­மை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

கைவி­டப்­பட்ட விசா­ர­ணைகள்

முன்­னைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­தினால் இணை அனு­ச­ரணை வழங்கி பொறுப்பு கூறும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தாக அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியை ஏற்றுச் செயற்­படப் போவ­தில்லை என்று புதிய அர­சாங்கம் ஏற்­க­னவே கூறி­யுள்­ளது. அத்­துடன் அதற்­கான ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளையே மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என்ற கருத்­துக்­க­ளையும் அது வெளி­யிட்­டுள்­ளது.

அது மட்­டு­மல்­லாமல் பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களில் ஒன்­றாக முன்­னைய அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்துக்­கான சட்ட வரை­பு­களில் மாற்றம் செய்­வ­தற்­கான முனைப்­பையும் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது.

புதிய அர­சாங்­கத்தின் முரண் நிலை­யி­லான இத்­த­கைய நிலைப்­பாட்டில், அழுத்­தங்கள் நிறைந்த புதிய திருப்­பத்­தையே சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை எதிர்­கொள்ள நேரிடும் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

சில மாதங்­களில் இடம்­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் எப்­ப­டி­யா­வது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்­று­விட வேண்டும் என்ற முனைப்பில் புதிய ஆட்­சி­யா­ளர்கள் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­யோ­கித்த அதே பிர­சார உத்­தியைக் கைக்­கொண்டு இந்தத் தேர்­த­லிலும் அமோ­க­மாக வெற்­றி­ய­டைய வேண்டும் என்ற இறுக்­க­மான தீர்­மா­னத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

இந்த நிலையில் சர்­வ­தேச மட்­டத்தில் இலங்­கையின் பொரு­ளா­தார பலத்தைத் தாங்கி நிற்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜிஎஸ்பி வரிச்­ச­லுகை உரி­மை­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தத் தக்க வகை­யி­லான அழுத்­தங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யிலும், அதற்கு வெளிப்­ப­ரப்­பிலும் ஏற்­ப­டு­மானால் அது அமை­திக்கு ஒவ்­வாத நிலை­மை­க­ளையே உள்­நாட்டில் ஏற்­ப­டுத்தக் கூடும்.

மனித உரிமை மீறல்­க­ளையும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளையும் உள்­ள­டக்­கிய போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­றி­ருந்­தன என்ற சர்­வ­தேச மட்­டத்­தி­லான குற்­றச்­சாட்­டுக்­களை புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள பேரின அர­சியல் தலை­வர்கள் தொடர்ந்து மறுத்து வந்­துள்­ளார்கள். மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை. போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் இடம்­பெ­ற­வில்லை என்­பது அவர்­க­ளு­டைய உறு­தி­யான நிலைப்­பாடு.

போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களின் நிழல் வடி­வி­லான – கடற்­ப­டை­யினர் சம்­பந்­தப்­பட்­ட­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள, கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற 11 மாண­வர்கள் தொடர்­பி­லான சம்­பவம், ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்திச் செல்­லப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளமை, மற்­று­மொரு ஊட­க­வி­ய­லா­ள­ரா­கிய கீத் நோயர் கடத்­தப்­பட்ட சம்­பவம் உள்­ளிட்ட அர­சியல் குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட படைத்­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களைப் புதிய அரசு கைவிட்­டுள்­ளது.

நிலை­மாற்ற அர­சியல் போக்கு

இந்தச் சம்­ப­வங்கள் உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த புல­னாய்வு பிரிவின் உய­ர­தி­கா­ரிகள், கீழ் நிலைத் தரத்­திற்கு இடம் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களில் முக்­கிய அதி­கா­ரி­யா­கிய நிசாந்த சில்வா என்­பவர் குடும்­பத்­துடன் நாட்­டை­விட்டு தப்­பி­யோடி சுவிற்­சர்­லாந்தில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தாக அர­சாங்­கமே அறி­வித்­துள்­ளது. அத்­துடன் இவர்கள் புல­னாய்வு விசா­ரணை என்ற போர்­வையில் அர­சியல் பழி­வாங்­கலில் ஈடு­பட்ட தேசத்­து­ரோ­கிகள் என்ற ரீதி­யிலும் கணிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் ஐசிஜி என்ற சர்­வ­தேச நெருக்­கடி குழு இலங்­கையை நெருக்­க­டிகள் மிகுந்த ஒரு நாடா­கவும், 2020 இல் வன்­மு­றைகள் நிறைந்­த­தா­கவும் திகழும், இது உள்­நாட்டு சமா­தா­னத்­துக்கும், இனங்­க­ளுக்குமி­டை­யி­லான நல்­லி­ணக்கம், நல்­லு­றவு மற்­றும் இன ஐக்­கியம் என்­ப­வற்­றுக்குப் பாத­க­மா­ன­தா­கவும் அமைந்­தி­ருக்கும் என்று எதிர்வு கூறி­யுள்­ளது.

இத்­த­கைய நிலை­மை­களைப் போக்கி சமா­தா­னத்தை நிலை­நி­றுத்தும் நோக்கில் புதிய அர­சாங்­கத்தை தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களின் ஊடாக இலங்கை அர­சாங்­கத்தை வழிப்­ப­டுத்த வேண்டும், நெறிப்­ப­டுத்த வேண்டும் என்று ஜன­நா­யக விழுமியங்கள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் அரசியல், மத சுதந்திர நிலைமைகளுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகளாகிய சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச நெருக்கடிக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

பல்லின மக்களையும் பல மதங்களையும் கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடாகிய இலங்கையில் பன்மைத்தன்மை கொண்ட ஆட்சி முறையைக் கையாள்வதற்கு பேரின அரசியல்வாதிகள் விரும்பவில்லை. நாடு அந்நியராகிய ஆங்கிலேயரின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்ற கடந்த 72 ஆண்டுகளாக சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்கும், சிங்கள பௌத்த தேசியத்தை நிலைநிறுத்துவதற்குமான அரசியல் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார்கள்.

இலங்கையை பேரின மக்கள் ஏகபோக அரசியல் மத உரிமைகளுடன் செல்வாக்குப் பெற்ற நாடாகவும், குறிப்பாக இதனை ஒரு பௌத்த நாடாகவும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் படிப்படியாகப் பேரினவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு, படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றார்கள்.

அந்தப் பேரினவாத அரசியல் வழிப்போக்கில் முக்கியமான கட்டத்தில் – 2020 ஆம் ஆண்டில் இலங்கை காலடி எடுத்து வைத்துள்ளது. சமாதானத்தின் மீது பற்று கொண்டுள்ள சர்வதேச அமைப்பாகிய சர்வதேச நெருக்கடி குழு மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்புகள் மீது அக்கறையும் அதன் வளர்ச்சியில் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் மரபு வழியில் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருந்த இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமாற்ற அரசியல் போக்கின் பக்கம் தமது பார்வையையும் கவனிப்பையும் செலுத்தி இருக்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச நெருக்கடி குழு எதிர்வு கூறியுள்ளவாறான நிலைமைகளுக்கு நாடு ஆளாகுமா அல்லது சமாதானம் தழைத்தோங்கி நாடு செழிப்படையுமா என்பதில் எதிர்வு கூறுவது கடினமான காரியமாகவே உள்ளது.

– பி.மாணிக்கவாசகம்