நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக குழு கூட்டதின் போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வுகள் 10.30 – 7.30 மணி வரையிலும், 06 ஆம் திகதிக்கான அமவர்வுகள் 10.30 தொடக்கம் 4.30 மணிவரையிலும், மறுதினமான 07 ஆம் திகதிக்கான அமர்வுகள், 10.30 – 7.30 மணி வரையிலும் இடம்பெவுள்ளதாக அறிய முடிகிறது.

