நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய அமைச்சில் நேற்றைய தினம்(24) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையத்தின் மூன்றாவது கட்ட பணிகள், கெரவலபிட்டி எல்.என்.ஜி மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

