கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

218 0
புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல உடுவ, நாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (15) 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடுகொட வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக புளத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மற்றும் அவரது சகோதரர் ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் புளத்கொஹுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.