பஸ்களுக்கு இடையில் சிக்கி உயிரை விட்ட நபர்!

226 0

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியின் ஈரியவெடிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (15) 8.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்களுக்கு இடையில் குறித்த நபர் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

37 வயதுடைய கண்டி, ரதாவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் குறித்த பஸ்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.