பதுளை மற்றும் யாழில் மோதல் – 15 பேர் காயம்

323 0

பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (15) பிற்பகல் ஏற்பட்ட இந்த மோதலில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுள் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகரில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

குடி போதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.