தமிழ் மக்களுக்கு இனிய தை பொங்கல் வாழ்த்துகள் – யேர்மன் இடது சாரி கட்சியின் பிரதிநிதி திரு. ஹென்னிங்(காணொளி)

876 0

பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் என்பது ஒரு இனத்திற்கு மிகப் பெரும் முக்கியதுவத்தை வகிக்கின்றது. குறிப்பாக நிர்ப்பந்திக்கப்பட்டு புலம்பெயர்ந்த ஒரு சமூகமாக வாழும் தமிழ் மக்களுக்கு இன்றும் இருக்க கூடிய கடமைகளின் அடிப்படையில் மேலும் தமக்கான வலுவை அடைவதற்கு இப்படியான நிகழ்வு என்பது மிகவும் பெறுமதியானது. தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை , எவ்விதமான விசாரணைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படாத இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மேலும் பல விடையங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும். இடதுசாரி கட்சியாகிய நாம் உங்களுடன் இணைந்து சர்வதேச ஒற்றுமையுடன் தமிழர்களுக்கான நீதிக்காகவும் , சுயநிர்ணய உரிமைக்காகவும் , அத்தோடு இங்கு நிலவும் பல சமூக பிரச்சைனைகளுக்காகவும் போராட விரும்புகின்றோம். அந்தவகையில் உங்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.