மடு பகுதியில் அனுமதியின்றி பெறுமதியான மரம் தரித்த நபர் கைது

168 0

மடு, வயலாங்கட்டு வன பகுதியில் அனுமதியின்றி நுழைந்து பெறுமதியான மரம் ஒன்றை தரித்து அதனை சுத்தப்படுத்தி கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு வெட்டப்பட்ட 13 மரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக மடு வன ஜீவிகள் காரியாலத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.