3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

300 0

009அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

படகுகளில் சென்று அகதி அந்தஸ்த்து கோரிய 400க்கும் அதிகமானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவர்களில் 160 பேர் சுயவிருப்பத்தின் பேரிலும், ஏனையோர் பலவந்தமாகவும் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் படகுடனேயே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தி ஒஸ்ட்ரேலியன் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.