நிதி சலவைச் சட்டத்தின் கீழ், நாமலுக்கு எதிராக விசாரணைகள் நிறைவு

260 0

namal_election_நிதி சலவைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்சமயம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி சோசடி எதிர் காவல்துறை பிரிவு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இதனை தெரிவித்தது.

நாட்டின் றகர் விளையாட்டை மேம்படுத்துவதாக கூறி, க்ரிஸ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, அதனை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை நிறைவு பெற்றதன் பின்னர் அதன் சாரம்சம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

எனினும், இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என, நிதி சோசடி எதிர் காவல்துறை பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்தனர்.