சிறீலங்கா அரசாங்கத்தை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்

281 0

16370சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்காகவும், சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியைச் செய்ய முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதனை அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச சார்பற்ற நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.