பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி

310 0

hszநாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார்.

பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ள குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் இரண்டு இராணுவ முகாம்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தப் பிரதேசத்தில் பொதுமக்களுடன் இராணுவத்தினரும் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், பலாலி கன்டோன்மென்ட் பிரதேசத்துக்குள் இருந்த 1,927.6 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில், சிறிலங்கா இராணுவம், 7,185.98 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைத்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கீரிமலையில் சிறிலங்கா படையினரால் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில், வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 454ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அறிவி்ப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.