அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

345 0

ind_sl_flagஎல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அதிக பட்ச அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகபட்ச அதிகாரங்களை பகிரும் வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை சிறீலங்காவிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா அதனை ஒரு வரைமுறையாக வைக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தமக்கு எத்தகைய ஆட்சி பொருத்தமானதாக இருக்கும் என ஒவ்வொரு இலங்கையரும் தீர்மானிக்கவேண்டுமெனவும் இந்தியா தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.