கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 7 பேர் கைது

165 0

பாலாவி கரம்பை பிரதேசத்தில் கேரளக் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் ஏழு பேரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 வயது முதல் 56 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பாலாவி, புத்தளம் மற்றும் கல்லடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் சிறிய சுருள்களில் சுற்றப்பட்ட 294 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.