கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!

284 0

cope-sunil-handunneththiசர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைகள் அனைத்தும் நிறை­வ­டைந்து விட்­டன. இதன்­பி­ர­காரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­படும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கோப் குழுவின் தலை­வ­ரு­மான சுனில் ஹந்­து­ன்நெத்தி தெரி­வித்தார்.

நேற்று நடை­பெற்ற கூட்டத்­தின்­போது மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி உள்­ளிட்ட அனைத்துக் கட்­சிகளினது இணக்கம் கிடைக்கப் பெற்­ற­தா­கவும் அவர் குறிப்பிட்டார்.

பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியின் குழு அறை 2 இல் மத்­திய வங்கி பிணை­முறி குறித்­தான கோப் குழு கூடி­யது. இதன்­போது இவ்­வி­வ­காரம் தொடர்பில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­குதி குழு அறையில் கூடிய கோப்­குழு கூட்­டத்தின் போது மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பாக பெரும் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து கோப்­குழு கூட்­டத்தில் இருந்து அதன் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்தி வெளி­ந­டப்பு செய்­தி­ருந்தார். குறித்த விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அழுத்தம் பிர­யோ கிப்பதாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் கூட பாரா­ளு­மன்­றத்தில் கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டி­ருந்தது. இந்­நி­லை யில் மத்­திய வங்கி பிணைமுறி தொடர்­பாக கோப் குழு நேற்று மீண்டும் கூடி­யது.

இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்சி உள்­ளிட்ட ஏனைய கட்சிகளின் இணக் கம் தெரிவித்தமைக்கு அமைவாக கோப் குழுவின் அறிக்கை நாளை பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.