சூதாட்ட மையம் ஒன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்த குற்றத்திற்காக சிலாபம் பொலிஸ் பிரிவுடன் இணைந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 8 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி வென்னப்புவ பிரதேசத்திலுள்ள சூதாட்ட மையத்தில் பண பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களில் சிலரை மாத்திரம் கைது செய்துள்ள இவ்வாறு பணிநீக்கம் செய்துள்ள குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே குறித்த 8 பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

