ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

282 0
ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 வயதுடைய ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதேவேளை, காயமடைந்த மற்றைய நபர் ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.