எழுக தமிழுக்கு ஆதரவாக முல்லைத்தீவிலும் கடையடைப்பு

272 0

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு ஆதரவு வழங்கப்படுகின்றது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்று வருகின்றது

இதற்காக இன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி பூரண கடையடைப்பு மேற்கொள்ளுமாறும்   இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு சந்தைகள் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு பூரண ஆதரவு வழங்குவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது