ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு!

266 0

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயனித்த ரயிலில் இருந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளையை நோக்கி ரயில் நெருங்கும்போது அதிகாலை 5.50 மணியளவில் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நபர் 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பொல்காவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயனித்த ரயிலில் நபர் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.