கஞ்சிபானை இம்ரானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

251 0

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை  இம்மாதம் 20 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான், ஹெரோயின் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது சகாக்களை விடுவிக்க இவ்வாறு  வாழைத்தோட்டம்  பொலிஸ் நிலைய மோசடி தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கொழும்பு பிரதான நீதிவனிடம் தெரிவித்தது.

இதனையடுத்தே கஞ்சிபானை இம்ரானை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.