ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையால் அந்த கட்சி துண்டு துண்டாக உடைந்து போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறிய அவர், சஜித் பிரேமதாச வேட்பாளராவதற்காக தனக்கு தெரிந்த அனைத்து வகையான விளையாட்டுகளிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக அவரை தெரிவு செய்ய போவதில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் ஐ.தே.க தனது செல்வாக்கை இழந்த நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.