வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

397 0
கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்ஞபான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இரவு 7.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்புருபிட்டிய பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.