ஒடிசாவில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

302 0

death-545ddeஇந்திய ஒடிசா மாநில தம்ரா துறைமுகத்தில் தரித்திருந்த கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது

பெட்போட் கெஸ்ட்ல் என்ற இந்தக்கப்பல் சீனாவுக்கு இரும்புகளை ஏற்றிச்செல்லும் நோக்கில் தரிந்திருந்தது.

இந்தநிலையில் இலங்கையரின் சடலம் கப்பலுக்குள் கிடந்ததாக கூறி கப்பலின் தலைவர் துறைமுக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

44 வயதான ஹெட்டிஆராச்சிகே சுகத் சிறியந்த டி சில்வா என்ற குறித்த இலங்கையர் மாரடைப்பு காரணமாக மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக சடலம் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.