இலங்கை இந்திய படையினருக்கு இடையில் கூட்டு பயிற்சிகள் இன்று ஆரம்பம்

393 0

sri_lanka_military_0199இலங்கை இந்திய படையினருக்கு இடையில் 4வது முறையாக மித்ரசக்தி என்ற கூட்டு பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது.

இலங்கை சிங்க படைத்தலைமையகத்தில் இந்த பயிற்சிகள் ஆரம்பமாகின.

இதன்போது பயங்கரவாத தடுப்பு உட்பட்ட படை நடவடிக்கைகளின் உத்திகள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்துக்கொள்ளப்படவுள்ளன

இந்த பயிற்சியில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள் உட்பட 45 வீரர்கள் பங்கேற்கின்றனர்.