முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

276 0

sarath_gunartna_11_05_02முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நீர்கொழும்பு காவல்துறையினரால் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார்.

2002ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை சரத்குமார குணரத்ன, காவல்துறை நிலையத்தில் சரணடைந்தபோது கைதுசெய்யப்பட்டார்

இதனையடுத்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.