காஷ்மீர் நடவடிக்கையால் ஆத்திரம்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பயங்கரவாத குழுக்கள்!

339 0

காஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாத குழுவினர் இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை ஐ.நா. சபையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.