காலி, கதுருதுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதான தம்மிக்க சிசிர குமார என்ற திருமணமாகாத ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட தகறாரே கொலைக்கு காரணம் என தெரிவிக்கும் ஹபராதுவ பொலிஸார், கூரிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.