பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை நீடிக்க முடிவு

239 0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவுகுழுவின் காலத்தை மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கவுள்ளதாக குழுவின் உறுப்பினரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட கால பகுதிக்கள் குறித்த தாக்கதல் சம்பவங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை தயாரிக்க முடியாமல் இருப்பதால் இந்த மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.