இலஞ்ச ஊழலை ஒழிக்க 5 வேலைத் திட்ட சுற்றுநிரூபம்

205 0
இலஞ்ச ஊழலை ஒழிக்க அரச நிறுவனங்களில் 5 வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவதற்கான சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுநிரூபம் தொடர்பில் அனைத்து அரச நிறுவன உத்தியோகத்தர்களையும் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் சட்டம், சொத்துகள் தொடர்பான சட்டம் அதேபோல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் அடிப்படை சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் அரசாங்க சட்ட தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.