அனுராதபுரம் – போலி நாணயங்களுடன் இருவர் கைது

302 0

arrest-logo-colourful_104700போலி நாணயத் தாள்களுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களில் ஒருவர் போலி நாணயத்தாள்களுடன் அனுராதபுர வர்த்தக நிலையமொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்றுள்ள நிலையில், அனுராதபுரம் பொலிஸ் விசேட குற்றப் பிரவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மற்றைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுதுடன், அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.