கொழும்பு மேம்பாலங்களில் வாகன ஒத்திகை

312 0

dehiதெஹிவளை மற்றும் நுகேகொடை மேம்பாலம் பகுதியில் விசேட வாகன ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த ஒத்திகையானது இம் மாதம் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில், குறித்த மேம்பாலங்கள் ஊடாக காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை கொழும்பை நோக்கி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாலை 5.30 முதல் 6.30 வரை கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் குறித்த ஒத்திகை நேரத்தில் அனுமதிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.