இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) என்ற அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிராதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

